சேலம் தாதகாப்பட்டி வள்ளுவர் காலனி ஆசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி. இவரது மனைவி நந்தினி கடந்த ஐந்தாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி நீண்ட நேரம் ஆகி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சுப்பிரமணி வீராணம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாதேசன் லாரி டிரைவர் அவர். கடந்த 30ம் தேதி லாரியின் உரிமையாளர் விசுவநாதனுடன் நாமக்கல்லில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மாதேசன் கிருஷ்ணகிரிக்கு பஸ் ஏறி உள்ளார். ஆனால் மாதேசன் வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது பற்றி மாதேசனின் சகோதரி ஜீவா பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.