சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவு

80பார்த்தது
சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவு
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். வெயிலினால் சாலையில் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

குறிப்பாக முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் சிலர் குடை பிடித்தவாறு செல்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலை மற்றும் முகத்தில் வெயில் படாதபடி துணி அல்லது துப்பட்டாவை போர்த்தி பயணிக்கின்றனர். சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல, செல்ல வெயில் படிப்படியாக அதிகரித்து சுட்டெரித்தது. சேலத்தில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரியாக பதிவாகி உள்ளது. பழஜூஸ் கடைகள் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சாலையோரத்தில் ஆங்காங்கே பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ், தர்பூசணி, கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகள் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன. 

இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் அவற்றை வாங்கி பருகி தாகத்தை சற்று தணித்து வருகின்றனர். வெயிலினால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தை தாங்குப்பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி