சேலம் மத்திய சிறையில் உள்ள எழுத, படிக்க தெரியாத கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தாண்டு சிறப்பு எழுத்தறிவு திட்ட தொடக்க விழா சிறையில் நடைபெற்றது.
இதற்கு சிறை சூப்பிரண்டு வினோத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் கலந்து கொண்டு கைதிகளுக்கான எழுத்தறிவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 260 கைதிகள் சேர்ந்து அடிப்படை கல்வியை கற்று வருகின்றனர். 6 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரிகா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.