தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 41, 398 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 20591 மாணவர்கள், 20807 மாணவிகள், 913 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 1465 தனி தேர்வர்கள் என மொத்தம் 41 ஆயிரத்து 398 பேர் 183 தேர்வு மையங்களில் தேர்வுகள் எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களில் 190 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 190 துறை அலுவலர்கள், 230 பறக்கும்படை அலுவலர்கள், 3500-க்கும் மேற்பட்ட அறைக்கண்காணிப்பாளர்கள் என 4100 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.