முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 14. 08. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மாவட்ட டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஆட்சித்தலைவர்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 14. 08. 2024 அன்று மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.
மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.