சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 26), எலக்ட்ரீசியன். இவர் 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினாள். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை ‘போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.