சேலம்: கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைக்குழுக்கள் தேர்வு

76பார்த்தது
சேலம்: கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைக்குழுக்கள் தேர்வு
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு சேலத்தில் வருகிற 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது. நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், கிராமிய பாட்டு உள்ளிட்ட கலைக்குழுக்கள் நிகழ்ச்சி பதிவுகள் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தில் 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. 

இதே அலுவலகத்தில் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெருக்கூத்து, நாடகம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கான பதிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். விழாவில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026-ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி