மணல் குவாரிகளை அரசேநடத்த வேண்டும் மணல்லாரி உரிமையாளர்கள் மனு

72பார்த்தது
சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயக்கப்படாததால் எம். சான்ட் உற்பத்தியாளர்கள் இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு எம் சான்ட் விற்பனை செய்து வருவதாகவும், தரம் இல்லாத எம்சான்ட்களை விற்பனை செய்து வருவதாகவும் மணல் லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே கிரஷர் உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் எம்சான்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை ஆங்காங்கே கிடங்கு அமைத்து விற்பனை செய்து வருவதால் மணல் லாரி உரிமையாளர்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும், இது போன்ற நடவடிக்கைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக அரசு பதினைந்து நாட்களுக்குள்ளாக தீர்வு காணவில்லை எனில் சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி