சேலம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சூர்யா கோரிமேடு பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனபிரியன் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு அறிமுகமானவர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மாணவி சூர்யாவை கத்தியால் குத்தியுள்ளார். மோகனபிரியன் கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.