சேலம் இரும்பாலை பக்கம் உள்ள மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த அருணகிரி இவரது மகன் தனுஷ் பெயிண்டராக இருந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் பெற்றோரிடம் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் தாய்மாமன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று நண்பருடன் தாரமங்கலத்திற்குச் சென்ற தனுஷ் அளவுக்கு அதிகமாகக் குடித்துள்ளார். அப்போது நண்பரிடம் 'நான் உயிரோடு இருக்கமாட்டேன், சாகப்போகிறேன்' எனக்கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவருக்கு அறிவுரை கூறிய நண்பர்கள் நேற்றிரவு செல்போனில் அழைத்தனர், எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்துப் பார்த்தபோது அங்கு தனுஷ் சேலையில் தூக்கிலிட்டுத் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் கொண்டுசெல்லும்போது வழியிலேயே தனுஷ் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.