ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டரங்கம்

58பார்த்தது
ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டரங்கம்
சேலம் மாவட்டம். கருப்பூரில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கத்தினை ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலி மூலமாக மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்கள்.

இப்பல்நோக்கு விளையாட்டரங்கில் 400 மீட்டர் ஓடுகளம், கைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், கைப்பந்து மைதானம், டென்னீஸ் மைதானம், கோ கோ மைதானம், ஜிம்னாஸ்டிக் மைதானம், கூடைப்பந்து மைதானம், ஹாக்கிமைதானம், உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம், நிர்வாக அலுவலகம், விளையாட்டு விடுதி, உள்விளையாட்டரங்கம் ஆகிய விளையாட்டு திடல்கள் அமையவுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேட்டூர் சார் ஆட்சியர் திருமதி நே. பொன்மணி, இ. ஆ. ப. , உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி. இ. ஆ. ப. மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. எஸ். சிவரஞ்சன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி