சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டிப்பு: நர்சிங் மாணவி தற்கொலை

79பார்த்தது
சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டிப்பு: நர்சிங் மாணவி தற்கொலை
சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பொற்செல்வி (வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி. எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொற்செல்வி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து மாணவி பொற்செல்வியின் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி