ஆசிய எறிபந்து பெடரேசன் மற்றும் தமிழ்நாடு எறிபந்து அசோசியேசன் சார்பில் இந்தியா - இலங்கை இடையேயான சர்வதேச எறிபந்து போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா 32 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக மூன்று போட்டிகள் நடைபெற்றன.
இதில் இருமுறை வெற்றி பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த சர்வதேச எறிபந்து போட்டியில் இந்திய எறிபந்து அணியின் துணை கேப்டனான சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். தொடர்ந்து சேலம் வந்த சந்தோஷ் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.