சேலம் ஜருகு மலை பகுதியை சேர்ந்தவர் ஆரப்பலீஸ்வரன் கூலித் தொழிலாளி. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது அதனையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துமலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அப் பகுதியினர் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரப்பலீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா? , அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.