ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம் 5ஆயிரம் பேருக்கு நல உதவிகள்

63பார்த்தது
ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டம் 5ஆயிரம் பேருக்கு நல உதவிகள்
சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதி, சேலம் தெற்கு சட்டசபை தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலம் தாதகாப்பட்டி கேட்டில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கொண்டலாம்பட்டி பகுதி-2 செயலாளர் கே. பி. பாண்டியன் தலைமை தாங்குகிறார்.
மாவட்ட பொருளாளர் பங்க் எஸ். வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற செயலாளர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலசுப்பிரமணியம் எம். எல். ஏ. , கொண்டலாம்பட்டி பகுதி-1 செயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அ. தி. மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அப்போது 5 ஆயிரத்து 176 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம், மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், அனைத்துலக எம். ஜி. ஆர். மன்ற துணை செயலாளர் எம். கே. செல்வராஜூ, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி