ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு தொழுகையும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து இஸ்லாமிய பெண்கள் உள்பட அனைவருக்கும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இதில் தவெக மாநகர் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் அனைவருக்கும் பிரியாணி பரிமாறினார்.