கோரிமேட்டில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

61பார்த்தது
கோரிமேட்டில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
சேலம் கோரிமேட்டை அடுத்த அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 62). இவர் டி.வி. பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். தனது மனைவியை 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இவர் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 2 நாட்களாக முரளிதரன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதே அக்கம் பக்கத்தினர் இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது முரளிதரன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். 

உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முரளிதரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி