சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தி. மு. க. தலைமை அறிவிப்பின் படி சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் என தி. மு. க. வினர் அந்தந்த பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள், பொது இடங்களில் வைத்துள்ள கட்சிக்கொடிக்கம்பங்களை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கட்சி கொடிக்கம்பங்களின் விவரங்களை கட்சி தலைமைக்கு வருகிற 28-ந்தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.