சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, துணைத்தலைவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி எம். பி. பேசியது குறித்து தவறான கருத்துகள் கூறிய முன்னாள் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரையும், அவரது பேச்சை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடியையும் கண்டிக்கிறோம் என பதிவு செய்தனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர பொது செயலாளர் வக்கீல் கார்த்தி, மண்டல குழு தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.