சேலத்தில் சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

73பார்த்தது
சேலத்தில் சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 55). இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஸ்ரீவர்சன் என்ற மகன் உள்ளான். ஆனந்தன் சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள மடப்பள்ளியில் சமையல் வேலை பார்த்து வந்தார். 

மேலும் அவர் கடந்த 2 மாதமாக அங்கு வேலைக்குச் செல்லவில்லை. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவி தனது மகன் வேலை விஷயமாக சென்னைக்குச் சென்றார். நேற்று ஸ்ரீதேவி தனது கணவரின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. 

இதையடுத்து அவர் தனக்குத் தெரிந்த ஒருவருக்குத் தொடர்பு கொண்டு கணவர் வீட்டில் இருக்கிறாரா என பார்க்குமாறு கூறினார். அதன்பேரில் அவர் அங்குச் சென்று பார்த்தார். அப்போது ஆனந்தன் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆனந்தன் உடலை போலீசார் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் எதற்காகத் தற்கொலை செய்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி