சேலம்: கிறிஸ்தவ சேவை சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை

72பார்த்தது
சேலம்: கிறிஸ்தவ சேவை சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை
சேலம் வசந்தபுரம் இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமாதான இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஏராளமானவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய நிறுவனரும், தலைவருமான ஜெயராஜ் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
வசந்தபுரம் செயின்ட் பேசில் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஏற்காடு மெயின் ரோடு வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா வந்து, பின்னர் மணக்காடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை சமாதான இல்ல செயலாளர் ஜெயசீலி கிறிஸ்டி, இயக்குனர்கள் நீவா லில்லி எஸ்தர், வீரராகவன் மற்றும் பேசில் பிரைட், ஜாய் ஆர்கனேஷ், டேவிட் லிவிங்ஸ்டன், சோபியா லிவிங்ஸ்டன் மற்றும் சேவை நிலைய ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவில் அனைத்து கல்வி நிலையங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி