வருகிற 22-ந் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23-ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அப்போது நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. அந்த வகையில் டி. பெருமாபாளையம் ஊராட்சி காரைக்காடு ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் நீ. பா. வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆலோசகர்கள் மா. நாராயணன், பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், ஆனந்தபாபு, ஒன்றிய தலைவர் ரத்தினவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து டி. பெருமாபாளையம் கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.