கே. ஆர். தோப்பூரில் பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்த அருள் எம்எல்ஏ

65பார்த்தது
கே. ஆர். தோப்பூரில் பயணிகள் நிழற்கூடம் திறந்து வைத்த அருள் எம்எல்ஏ
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கருக்கல்வாடி ஊராட்சி கே.ஆர்.தோப்பூரில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய நிலையில் இருந்தது. அப்பகுதி மக்கள் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தனர். 

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடந்தது. இதனை அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்ததுடன் பொதுமக்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி