சேலம்: வீட்டில் ஏ. சி. எந்திரம் பொருத்தியதில் தகராறு: கைது

53பார்த்தது
சேலம்: வீட்டில் ஏ. சி. எந்திரம் பொருத்தியதில் தகராறு: கைது
சேலம் போடிநாயக்கன்பட்டி அண்ணாநகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் அசன் (வயது 24). இவர் தனது வீட்டில் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது வெப்ப காற்றை வெளியேற்றும் பகுதி, பக்கத்து வீட்டின் வெளிப்புற சுவரின் அருகில் அமைந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் சையத் அகமது (50) என்பவர் அசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சையத் அகமது வீட்டில் இருந்து கத்தி மற்றும் கம்பியை எடுத்து வந்து அசனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 இதனை அவரது மாமா சையத்காதர் (34) என்பவர் தடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து சையத் அகமது தப்பி ஓடிவிட்டார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அசன், சையத்காதர் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கத்தியால் வெட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சையத் அகமது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி