பெண்ணிடம் பணம் மோசடி விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

84பார்த்தது
பெண்ணிடம் பணம் மோசடி விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
சேலம் பெரமனூரை சேர்ந்தவர் ஜீவிதா. இவரிடம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன், மணிகண்டன் (வயது 34) ஆகிய 2 பேர் சேர்ந்து வீடு கட்டி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வீடு கட்டி கொடுக்கவில்லை. இதனால் ஜீவிதா பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து ஜீவிதா பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி