சேலம்: அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

76பார்த்தது
சேலம்: அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்
சேலம் புறநகர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருமலைகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் குருபாலன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் தமிழ்மணி, முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, ஒன்றிய துணைச்செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் செம்மலை, ராஜமுத்து எம்.எல்.ஏ., புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பேசுகையில், வருகிற 2026 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். எடப்பாடி பழனிசாமி பல சோதனைகளைக் கடந்து மக்களுக்கு வரிச்சுமையில்லாத அரசை வழிநடத்தியவர். தி.மு.க. அரசின் பொய்யான வாக்குறுதிகளை அ.தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டுப்பிரசுரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி நிலவ கட்சியினர் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி