சேலம்: மின்சாரம் பாய்ந்து தட்சு தொழிலாளி பலி

82பார்த்தது
சேலம்: மின்சாரம் பாய்ந்து தட்சு தொழிலாளி பலி
சேலம் அழகாபுரம் மூலப்பட்டியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் தட்சு தொழிலாளியான இவர் கடந்த 24 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அந்த கல்லூரியில் பணி செய்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதனை பார்த்த கல்லூரி ஊழியர்கள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று (டிசம்பர் 25) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி