சேலம் நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை

77பார்த்தது
சேலம் நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை
சேலம் மாநகரில் உள்ள புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையங்களில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்கள் நின்று செல்லும் வழித்தடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பயணிகள் காத்திருந்து பஸ்சில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
சேலம் மரவனேரி சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அதாவது மேற்கூரை உடைந்து வெட்டவெளிச்சமாக உள்ளது. மேலும் மேற்கூரையின் தகரம் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் தொங்கி கொண்டு உள்ளன. விழும் நேரத்தில் பயணிகள் யாராவது அங்கிருந்தால் விபரீத சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. மழை நேரத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாத நிலையில் அந்த நிழற்குடை உள்ளது.
இதேபோல் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையும் உடைந்து காணப்படுகின்றன. இதனால் பயணிகள் சாலையோரத்தில் நின்று கொண்டு தான் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். பலத்த காற்று வீசினால் கூட இந்த மேற்கூரையின் தகரம் கீழே விழுந்து விடும். மழைக்காலம் தொடங்குவதற்குள் பயணிகள் நிழற்குடையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்றனர்.

தொடர்புடைய செய்தி