சேலத்தில் மது பாட்டில் பதுக்கி விற்ற 6 பேர் கைது

76பார்த்தது
சேலத்தில் மது பாட்டில் பதுக்கி விற்ற 6 பேர் கைது
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் ஜான்சன்பேட்டை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஜம்பு (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று காரிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் பெரியகவுண்டபுதூர் மற்றும் காரிப்பட்டி மலையன் நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபானம் விற்பனை செய்த எழுவாயி (75), பேபி (55) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு மதுவிற்ற காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவி, சுந்தரம் ஆகியோர் அன்னதானப்பட்டி, வீராணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபதுக்கி விற்ற வீரமணி (50), வள்ளியம்மாள் (65) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி