சேலத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை திருட்டு

66பார்த்தது
சேலத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை திருட்டு
சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 26). இவர், புதிய பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அவர் மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் மேற்கூரையை மர்ம நபர்கள் பிரித்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் மேற்கூரையை பிரித்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயின், அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து மாரி செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருடர்களின் அடையாளம் ஏதும் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி