பாகல்பட்டியில் பழைய இரும்பு கடையில் திருடிய 2 பேர் கைது

64பார்த்தது
பாகல்பட்டியில் பழைய இரும்பு கடையில் திருடிய 2 பேர் கைது
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஜங்ஷன் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). இவர் பாகல்பட்டி எஸ். கே. சிட்டியில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் வைத்திருந்த 50 கிலோ எடையுள்ள இரும்புகள் திருட்டு போனது.

இது குறித்து அவர் ஓமலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாரமங்கலத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (23). சித்தனூரை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் இரும்பை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி