தின்னப்பட்டியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

84பார்த்தது
தின்னப்பட்டியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்
சேலம் மாவட்டம் தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயிலில் இருந்து தவறிவிழுந்து 30 வயதுடைய வாலிபர் ஒருவர் படுகாயத்துடன் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவரின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி