சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கொன்ரெட்டியூர் பாலகுட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 65). இவர் மொபட்டில் தீவட்டிப்பட்டி அருகே உள்ள புளி சாத்து முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார், மொபட் மீது மோதியது.
இதில் ரத்தினம் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த கார் அவர் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.