சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா(45). இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் இருந்த விவசாய முள் மரங்கள், இன்று மதியம், திடீரென தீ விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் குடியிருப்புக் உள்ளதால், ஆத்தூர் தீயணைப்பு துறையினர் தகவலின் பேரில் விரைந்து சென்று, தண்ணீரை அடித்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.