ஜெயலலிதா பிறந்தநாள் விழாைவயொட்டி ஓமலூரில் மாநில கபடி போட்டி

65பார்த்தது
ஜெயலலிதா பிறந்தநாள் விழாைவயொட்டி ஓமலூரில் மாநில கபடி போட்டி
சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் வேலகவுண்டன்புதூர் எஸ்.எஸ்.கே. திருமண மண்டபம் அருகில் ஓமலூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, மாநில அளவிலான கபடி போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொள்கின்றனர். 

இந்தப் போட்டியை காண பார்வையாளர்களுக்கு கேலரி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னொளியில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சுழற்கோப்பையும் வழங்கப்படும். இதேபோல் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது.

. இன்று மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டு, இரவு 10 மணி வரை நடைபெறும். நாளை மறுநாள் இறுதிப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். இந்த நிலையில் இரண்டாம் நாள் போட்டியை நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்தி