சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்ட அளவில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம், ஓமலூர் கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கூட்டத்திற்கு மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் வாரியம் தொடர்பான தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.