பண்ணப்பட்டி ஊராட்சியில் ரூ. 21.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

83பார்த்தது
பண்ணப்பட்டி ஊராட்சியில் ரூ. 21.5 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி பண்ணப்பட்டி பஸ் நிறுத்தம் முதல் சந்தப்பட்டி ஏரி வரை சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாதாள சாக்கடை கால்வாய் அமைக்க ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதேபோல் ஒன்றிய 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பண்ணப்பட்டி கீழ்வீதியில் ரூ. 2½ லட்சத்தில் சாக்கடை கால்வாய், காங்கேயனூர் பொது கிணறு தூர்வாரல், குடிநீர் தொட்டி அமைக்க ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று ஒன்றிய பொதுநிதியில் பண்ணப்பட்டி காங்கேயனூர் பகுதியில் ரூ. 2 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

தொடர்ந்து இந்த பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சித்தேஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காடையாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார். மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி