சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே உள்ள அணையின் உபரிநீர் வழிந்து ஓடும் பாதையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருமலைக்கூடல் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சேட்டு (வயது 48) என்பதும், அங்குள்ள பாலத்தின் மீது அமர்ந்து இருந்தபோது உபரிநீர் பாதையில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.