மேட்டூரி்ல் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு

56பார்த்தது
மேட்டூரி்ல் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை 10 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 2,938 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி