மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

58பார்த்தது
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் நிர்வாக காரணங்களுக்காக மின் உற்பத்தி கடந்த 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் இந்த அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதேபோன்று தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வரும் பழைய அனல்மின் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக 2-வது யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று காலை 1-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி தரும் கொண்ட இந்த அனல்மின் நிலையத்தில் மீண்டும் 420 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி