தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனை, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றுலாத்தல பட்டியலில் இணைக்க வேண்டும்.
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாலமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க சிறப்பு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். மேட்டூர் அணை பூங்காவில் அனைத்து உபகரணங்களும் பழுது அடைந்துள்ளன. எனவே அதை சரிசெய்து தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மேட்டூர் அணை பூங்காவை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.