செலம்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: தவறி விழுந்த தொழிலாளி சாவு

69பார்த்தது
செலம்: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: தவறி விழுந்த தொழிலாளி சாவு
மேச்சேரி அருகே வெள்ளார் ஊராட்சி அரசமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). வெள்ளார் ஊராட்சியில் பைப்லைன் பழுது பார்க்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை எருமைப்பட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் செல்லும் பைப் பழுதடைந்தது. இந்த பழுதை நீக்க சுப்பிரமணியன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மேலே ஏறினார். 

அப்போது சுப்பிரமணியன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தொப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி