மாநாடு குறித்து மேச்சேரி கிழக்கு ஒன்றிய பாமகவினர் ஆலோசனை

69பார்த்தது
மாநாடு குறித்து மேச்சேரி கிழக்கு ஒன்றிய பாமகவினர் ஆலோசனை
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த மாநாடு குறித்தும், அதில் பங்கு பெறுவது குறித்தும் மேச்சேரி கிழக்கு ஒன்றிய பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் திண்ணை பிரசாரம் சீரங்கபுரத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் துரைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றியடைவதற்காக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் இரவு பகலாக கிராமம் தோறும் மாநாடு அழைப்பிதழை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்வதின் நோக்கம் குறித்து எடுத்து கூறினர். 

இதேபோல் பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் இளைஞர்கள், நெசவாளர்கள், வணிகர்கள் திரளாக மாநாட்டிற்கு திரண்டு வர வேண்டும் என்று ஒன்றிய செயலாளர் துரைராஜ் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மகளிர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி