நங்கவள்ளி அருகே குடிசை வீடு தீ பிடித்து முதியவர் பலி

79பார்த்தது
நங்கவள்ளி அருகே குடிசை வீடு தீ பிடித்து முதியவர் பலி
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி மாமரத்து மேடு பெரிய சோரகை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு குடிசை வீடு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் முதியவர் பெரியசாமியால் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதையடுத்து நங்கவள்ளி போலீசார் பெரியசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி