சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ஆங்காங்கே பாசி படர்ந்து தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நீர்வளத்துறை அதிகாரிகள் செறிவூட்டப்பட்ட நுண்ணுயிர்களை அவ்வப்போது நீர்த்தேக்கப் பகுதிகளில் தெளித்து வருகிறார்கள். இதனிடையே நேற்று 16 கண் பாலம் அருகில் தண்ணீரில் பாசி படர்ந்துள்ள பகுதியில் நுண்ணுயிர் தெளிக்கப்பட்டது.