கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

75பார்த்தது
கெங்கவல்லி அருகே சின்ன புனல்வாசல் பகுதியை சேர்ந்த வர் ரமேஷ். விவசாயி. இவர் நேற்று தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ கிணற்றின் அருகே வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் தவறி கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ரமேசை கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி