தலைவாசல் தனியார் கல்லூ ரி, பள்ளி வாகனங்களில் ஆர்டிஒ ஆய்வு

69பார்த்தது
சேலம்மாவட்டம் , தலைவாசல் அருகே உள்ள தேவயகுறிச்சி பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில்ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 83 தனியார் பள்ளிகளில் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 672 பேருந்துகள் உள்ள நிலையில் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டன.

ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார் அப்போது பெரும்பாலான வாகனங்களில் வாகனத்தை பின்னோக்கி இயக்கும் பொழுது கேமரா மூலம் பின் பகுதியில் யாராவது இருந்தால் ஒலி எழுப்பும் கருவி இல்லாததால் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதேபோல் வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசர வழிஉள்ளிட்டவை முறையாக இருக்கிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். விதிகளை முறையாக பின்பற்றாத 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை தகுதி நீக்கம் செய்யவும் அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி