சேலம் மாவட்டம் கெங்கவல்லி கூடமலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இந்த கொள்முதல் நிலையத்திற்கு கூடமலை, கொண்டையம்பள்ளி, கோனேரிப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, செந்தார்பட்டி, மண்மலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களில் விளையக்கூடிய நெல்லை கொள்முதல் நிலயத்திற்கு கொண்டு வந்து குடோன்களில் வைத்து உலர் களத்தில் உலர வைத்து பின்னர் அங்கு கொள்முதல் செய்து வருகின்றனர், ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நெல் பயிருக்கான பதிவு செய்த விவசாயிகள் நெல் அறுவடை செய்த பிறகு கொள்முதல் நிலையத்தை நீண்ட நாட்களாக திறக்கப்படாமலும் விவசாயிகளை அழிக்க அளிப்பதாகவும் மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் வசதி இல்லாமலும், நெல் உலர வைக்க உலர்க்களம் இல்லாததால் நெல் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளது இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு செயல்படாமல் விவசாயிகளின் நிலையை அறிந்து செயல்பட வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.