சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவகங்கைபுரம் பகுதியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் வைகாசி தேர் திருவிழாகடந்த மூன்றாம் தேதி பூ போடுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாரதணை கட்டப்பட்டது. தொடர்ந்து ஆண்கள் பெண்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது நிகழ்ச்சியில் கல்பனூர், ராமநாயக்கன்பாளையம், கொத்தாம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.