பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளுக்கு. ஊனத்தடுப்பு மற்றும் சுயபாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில், மாவட்ட தொழுநோய் பிரிவு தோல் மருத்துவர் சத்யா. முடநீக்கியல் பயிற்சியாளர் சாந்தினி, வட்டார மேற்பார்வையாளர் கந்தசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.